இலக்கணத்தை அப்படியே பின்பற்றவேண்டியதில்லை. இலக்கணம் என்பது வழிகாட்டி. வழிகாட்டியின் கருத்துகளை ஏற்று நம் தேவைகளை உணர்ந்து பயணத்தைத் தொடரலாம். இலக்கணத்தில் இருந்து முழுமையாக விலகாமல் நம் தேவைக்கேற்ப்ப இலக்கணத்தையொட்டி செல்லுதல் நன்மை. இலக்கணம் என்பது ஒருமுறை இயற்றப்பட்ட சட்டம் அல்ல காலப்போக்கில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரு அம்மொழியின் அறிஞர்களால் மாற்றியமைக்கப்படும்.