இயற்கை மருத்துவம்
சருமம்
சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தோல் பளபளப்பாக;
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தேமல்:
வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
வியர்க்குரு நீங்க:-
1. சந்தனத்தைக் கொண்டு வியர்க்குரு உள்ள இடத்தில் தேய்க்க பலன் தரும்.
2. நிறைய வியர்க்குரு வந்து அவதிப்படுபவர்கள் சாதம் வடித்த கஞ்சியை தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறியபிறகு குளித்தால் வியர்க்குரு மறையும்.
எச்சில் தழும்பு மறைய :-
பூவரசம் காயின் சாற்றைத்தடவி வர மறையும்.
அம்மை;
ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்
புண் ஆற:-
1. வேப்பெண்ணெயைத் தடவுவதன் மூலம் புண் ஆறும்.
2. வசம்பு தூளை காயத்தின்மீது தடவினால் காயம் குணமாகும்.
3. வெங்காயச் சாற்றில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கட்ட அடிபட்ட காயங்கள் குணமாகும்
4. சப்பாத்திக்கள்ளி பூவை கழுவி சுத்தம் செய்து விழுதாக அரைக்க வேண்டும். அந்த விழுதை கட்டியின் நிலைக்கேற்ப தொடர்ந்து கட்டி வந்தால் கட்டி உடைந்து ரணம் தானாக ஆறிவிடும்.
5. குப்பைமேனி இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகள் இருக்கும் இடத்தில் தேய்த்துக் குளித்தால் சொறி, சிரங்குகள் நீங்கும்.
6. நுணா இலையை அரைத்து பத்து போட்டால் சிரங்கு ஆறும்.
தேமல் மறைய;
வெள்ளைப் பூண்டின் நான்கு பல் எடுத்து பச்சை வெற்றிலை ஒன்றுடன் கசக்கி, இந்தச் சாற்றைத் தேமல் உள்ள பகுதிகளின் மேல் தடவி வரவும். நாளடைவில் தேமல் மறையும்
தீப்புண்:
1. இதன் சாற்றை தீப்புண்களில் தடவினால் குணமாகும். கற்றாழையில் சாறெடுக்க, அதை லேசாக நெருப்பில் வாட்டி பிதுக்கியெடுக்க வேண்டும். இலையின் மேற்புறத்தை சீவி அப்புறப்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
2. வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.